Tuesday, January 10, 2012

பௌர்ணமி


மாதம் ஒரு பௌர்ணமி போல்
உன் வரவு...
காத்திருப்பதும் ஒரு சுகம்தான்..!

Wednesday, November 2, 2011

மழைத்துளிகள்


மழைத்துளிகள் பொழியும் வேளை
உனை நினைக்கத்
தோன்றுகிறது...
நீயும் மழைத்துளியும் ஒன்றுதான்
தழுவிச் செல்லும் தண்ணீர் துளிகள்..!

Tuesday, March 22, 2011

நீ வருவாயென....



கதவுகளைத் திறந்தேன்
காற்று வந்தது...
என் நினைவுகளையும்
திறந்தே வைத்திருக்கிறேன்
நீ வருவாயென....

Monday, March 21, 2011

நினைவின் வருடல்




இன்றும் என் விழிகளில்
உன் நினைவுகளின் வருடல்கள்....
கனவாக அல்ல...கண்ணீராக!

Wednesday, March 16, 2011

நீ..




கனவெல்லாம் நீ..
உனைக் காண பகலெல்லாம் உறங்குகிறேன்..!

Monday, February 14, 2011

நினைவுகள்



உனக்கே தெரியாமல்
நீ எனக்கு கொடுத்தது
உன் நினைவுகள்
மட்டும் தான்!

Saturday, January 15, 2011

முத்து..!



உன்னை நினைத்து
சிந்திய கண்ணீரைச்
சிப்பியில் அடைத்தேன்..
முத்தானது!