Sunday, December 19, 2010

பிரிவு





பேசிக்கொண்டிருந்த நான்
ஊமையானேன்
உன் பிரிவால்..!

Friday, September 24, 2010

கனவு..!


இரவு வருகிறதோ இல்லையோ
கனவு வருகிறது..!
கனவு வருகிறதோ இல்லையோ..,
இமைகளை மூடினால்
நீ வருகிறாய்..!!

மரணம்..


மரணம் என்றால்
நான் பயந்து விடுகிறேன்...
நான் இறந்து விடுவேன் என்பதால் அல்ல,
உனை பிரிந்து விடுவேன் என்பதால்!!!

Monday, April 12, 2010

மழை

நான் அழகாய்
இருப்பதே
உன்னால் தான்
மழையே.!
...அன்புடன் பூமி.

Thursday, April 8, 2010

கலைந்து போனாய்!



நிலைத்திருக்கும்
நம் நட்பு என்று நினைத்தேன்...
கலைந்து போகும்
கனவாகிப் போனாய்!
கலைந்து போனது கனவு மட்டும் அல்ல,
என் நம்பிக்கையும் தான்..!

Wednesday, April 7, 2010

இலட்சியம்


உன்னோடு,
ஒரு மணி நேரம் வாழ்வது
என் இலட்சியம் அல்ல.
உன்னோடு வாழ்ந்த

ஒரு மணி நேரத்தில்
இறந்து போவதே அழகு..!


- அன்புடன், Add Image
விட்டில் பூச்சி

Tuesday, April 6, 2010

உதடு!

இறைவன் எழுதிய
இரு வரி கவிதை...
உதடுகள்!

Monday, April 5, 2010

உரிமை



பெண் : என் அனுமதியின்றி
என்னைத் தொடும் உரிமை
யார் தந்தது உனக்கு??

காற்று : என்னைக் கேட்டா என்னை சுவாசித்தாய்?

Wednesday, March 31, 2010

வண்ணத்துப் பூச்சி




ஒரே சட்டையோடு
வாழ்நாளையே கழிக்கிறது
வண்ணத்துப் பூச்சி!
(-தென்றல்)


அழகிய கவிதை!!!


தினமும்
வகுப்பில் வாசிக்கும்
அழகிய கவிதை
வருகை பதிவேட்டிலுள்ள
உந்தன் பெயர்!


(விகடன்)

Tuesday, March 2, 2010

நம் நட்பு...


உன் நட்பு..
மழைக்காலத்தில்
ஆலமரக்கிளையில்
ஒதுங்கும் பறவை
போலானாலும்,
என் நட்பு..
அந்த ஆலமரம் போன்று
உறுதியானது!!!